1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (22:10 IST)

ரயில் பயணத்தில் மு.க.ஸ்டாலின்

நமக்கு நாமே இரண்டாம் கட்ட பயணத்தை துவங்க கூடலூருக்கு, தற்போது ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணித்துக் கொண்டுள்ளார்.
 

 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப் பயணத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்.  அவரது இந்த திட்டத்தின் முதல் கட்ட பயணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி  திருச்சியில் நிறைவு பெற்றது.
 
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் 2ம் கட்டமாக 12 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இரண்டாவது கட்ட "நமக்கு நாமே" பயணத்தை துவங்குவதற்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூருக்கு தற்போது ரயிலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பயணித்துக் கொண்டுள்ளார். மக்கள் இயக்கம் நாளைய தினம் கூடலூரிலிருந்து தொடங்குகிறது.
 
மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்க தயராகி வருகின்றனர்.