வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (05:43 IST)

சென்னை புழல் சிறையில் மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

மதுவிலக்குப் போரட்டம் காரணமாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராடி காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைத் திமுகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
 
இந்தச் சம்பவம் குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மதுவுக்கு எதிராகப் போராடிய போது மாணவ - மாணவியர்களைக் காவல்துறையினர் லத்தியால் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.