வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (04:33 IST)

ஊழல் பற்றி பேச திமுக - அதிமுகவுக்கு தகுதி இல்லை: அன்புமணி

ஊழல் பற்றி பேச திமுக - அதிமுகவுக்கு தகுதி இல்லை: அன்புமணி

ஊழல் பற்றி திமுக - அதிமுக-வுக்கு பேச தகுதி இல்லை என  அன்புமணி கருத்து தெரிவித்துளாளார்.
 

 
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், பாமக சார்பில் தர்மபுரி குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தில், இன்னும் 50 நாட்களில் புதிய ஆட்சி அமையப் போகிறது. இந்த தேர்தலின் முடிவில் பாமக  ஆட்சி மலரப் போகிறது.
 
தமிழகத்தில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் மலிந்துவிட்டது. இதனால், இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பின் விளம்பில் உள்ளனர். ஊழல் பற்றி திமுக - அதிமுக-வுக்கு பேச தகுதி இல்லை.
 
தமிழகத்தில், மக்களை பாதிக்கும் மதுவையும், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் ஊழலையும் ஒழிப்பதே பாமகவின் லட்சியம்.நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் போடும் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தான் என்றார்.