செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (19:24 IST)

500 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது: காவல்துறையினருடன் தள்ளு முள்ளு

மேட்டூர் அணைக்குள் இறங்கி போராட்டம் நடத்த முயன்ற தேமுதிகவினரை காவ்லதுறையினர் கைது செய்தனர்.


 
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மேட்டூர் அணையில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்.
 
அப்போது, போராட்டக் காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அதையும் மீறி போராட்டம் நடத்த முயன்றதால், தேமுதிகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
 
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது, தடையை மீறி போராட்டம் நடத்திய தேமுதிக எம்எல்ஏ பார்த்தீபன் உள்பட 500 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.