செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (15:05 IST)

தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் அடுத்த கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கும் தடை

தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் சட்டமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரில் இருந்தும் 10 நாட்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


 

சட்டப்பேரவையில் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் கூட்டத் தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உரிமை மீறல் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து அடுத்த கூட்டத் தொடரிலும் 10 நாட்கள் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று சபாநாயகர் தனபாலன் தெரிவித்தார்.
 
இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.