1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (17:44 IST)

தீபாவளி டிக்கட் முன்பதிவு நிமிடத்திற்கு 7000 டிக்கட்டுகள் வீதம் சில நிமிடங்களில் தீர்ந்தது

தீபாளியன்று சொந்த ஊர் செல்பவர்களுக்கு இரயில்வே முன்பதிவு இன்று தொடங்கியது. இரயில்வே முன்பதிவு செய்யும் வேகத்தை அதிகரித்துள்ளதால், நிமிடத்திற்க 7000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்பதவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள்விற்று தீர்ந்துவிட்டதால் பொதுமக்கள் கவலையில் உறைந்துள்ளனர்.
 
தீபாவளி பண்டிகை வரும் 22 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அதற்காக முந்தைய வேலை நாட்களான 17, 18 உள்ளிட்ட நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஒவ்வொரு நாளாக தொடங்குகிறது. எனவே சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. 
 
எனவே டிக்கெட் எடுக்க காலை 8 மணிக்கு முன்னரே மக்கள் இரயில் நிலையங்களில் முடங்கினர். டிக்கெட் எடுப்பதற்கான நேரம் தொடங்கி உடனடியாக டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. டிக்கெட் முன்பதிவு செய்ய இணையத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் முன்பதிவு உடனடியாக முடிந்தது. எனவே இரயில் நிலையத்தை தஞ்சமடைந்த மக்கள் பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.