1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (09:42 IST)

சென்னை-திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் முனைப்பில் உள்ளனர்.
 
இதற்கேற்ப பேருத்துகள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடத்திலும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-திருச்சி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.
 
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாளை அக், 20 (வ.எண். 06861) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று (அக், 19) தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.