வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (12:06 IST)

கடிதம் அனுப்பிய சசிகலா: அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தினகரன்!

கடிதம் அனுப்பிய சசிகலா: அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தினகரன்!

தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை மெகா ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் வருமான வரித்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும்.


 
 
சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய பின்னர் அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அதன் பின்னர் சிறையில் இருக்கும் சசிகலா, தினகரன் மற்றும் விவேக்குக்குக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.
 
இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரிலுள்ள தனது இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். இந்தக் கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் கலந்துகொண்டனர். தினகரனின் இந்த திடீர் அவசர ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.