வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (12:10 IST)

திலீபன் தீவிரவாதியா? பகீர் தகவல்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் பல்வேறு கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திவந்தவர்கள் திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோர். திலீபனை கைது செய்த காவல்துறை தற்போது தமிழச்சியையும் கைது செய்ய முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
திலீபன் ஏற்கனவே தேசிய கொடியை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டவன். தற்போது சுவாதி வழக்கில் கருத்து தெரிவித்தும், ஆடியோ வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்திய திலீபனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
 
திலிபனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல்களை சோதனை செய்ததில், திலீபன், மகி என்ற பெயரில் தமிழச்சியிடம் வாட்ஸ்அப்பில் பேசியதும், தீவிரவாதிகள் பலருடன் தொடர்பில் இருந்ததாக சமூக வலைதளங்களில் ஒருசிலர் பதிவிட்டு வருகின்றனர்.
 
இதனையடுத்து சுவாதி கொலை வழக்கில் பல தகவல்களை வெளியிட்டதாலும், அதில் சிலரை குற்றவாளியாக கூறியதாலும், அவர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழச்சியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழச்சி தற்போது பிரான்ஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.