வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (21:38 IST)

முதலமைச்சரை ஆபாசமாக திட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது புகார்

முதலமைச்சரை ஆபாசமாக திட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்ட கவுன்சிலரும், அதிமுக வழக்கறிஞருமான ஏ.பி.மணிகண்டன் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றினை அளித்துள்ளார்.
 
அதில், ”கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று மேச்சேரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் அவர்களை மிகவும் ஆபாசமாக கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.
 
தமிழக முதல்வர் ஒரு பெண்மணி என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் மிகவும் அசிங்கமாக பேசினார். அவரை தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தமிழக முதல்வரை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும் மிகவும் தவறாக திட்டினார்.
 
எனவே மேற்கண்ட இருவர் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.