1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (16:50 IST)

'கத்தி' படத்தில் 2ஜி ஊழல் பற்றி வசனம் பேசிய விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

'கத்தி' திரைப்படத்தில் 2ஜி ஊழல் வழக்கு குறித்த வசனம் உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த வழக்கில், "2ஜி அலைக்கற்றை வழக்கு நிலுவையில் உள்ளதால் 'கத்தி' படத்தி்ல் உள்ள வசனம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாரீஸ்வரி, நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.