சென்னைக்கு தினசரி குடிநீர்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை நகருக்கு, தினசரி குடிநீரை வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகருக்கு, தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த பகுதிகளுக்கும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.