1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (18:21 IST)

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 4965 பேருக்கு கொரோனா உறுதி !

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில்  4965 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரை 88,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,475 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.