வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (15:05 IST)

முஸ்லீம்களின் பாதுகாப்பு அரண் காங்கிரஸ் - ஜி.கே.வாசன்

தமிழக காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபுபேலஸ் ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
 
இஸ்லாமியர்களுக்கு தனி வாரியம், 15 அம்ச திட்டம், உருது டி.வி. ஆகியவற்றை தந்தது காங்கிரஸ் அரசு என்றும், இஸ்லாமியர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பது காங்கிரஸ் கட்சி தான் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
 
பல கட்சிகள் இப்தார் நிகழ்ச்சி நடத்துகின்றன. ஆனால் 100 சதவீதம் இந்த நிகழ்ச்சியை நடத்தும் உரிமை காங்கிரசுக்குத்தான் உண்டு. நீங்கள் எல்லாம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் மாநில கட்சிகளுக்கு வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சி பின் தங்கிவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும் பின்னடைவு தான் என்று அவர் பேசினார்.