1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (16:12 IST)

செப்டம்பர்-2: சென்னையில் பரபரப்பு போஸ்டர்

சென்னை முழுவதும் “செப்டம்பர்-2, தண்டனை?” என்று அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


 

 
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்ப்பார்த்து அனைத்து கட்சியினரும் 
காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் ஒருபக்கம் செப்டம்பர் இரண்டாம் தேதி ஜெயலலிதா சொத்து குவிப்பில் தீர்ப்பு வர போகிறது என்று வதந்தி கிளம்பியுள்ளது.
 
இதுகுறித்து உளவுத்துறை விசாரணை நடத்தியதில் குற்றமே தண்டனை வெளிவர உள்ளதை முன்னிட்டு அந்த படத்திற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
 
இந்த போஸ்டர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.