வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2015 (16:21 IST)

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி ஒருவர், 55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதோடு பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.
 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் மேல தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலுவின், 4ஆவது மகள் ஸ்ரீமீளா (24). பி.எட். படித்து வந்தார். ஸ்ரீமீளா, திருத்துறைப்பூண்டியை அடுத்த சீளத்தநல்லூரைச் சேர்ந்த பெயிண்டர் கண்ணன் (55) என்பவரை காதலித்துள்ளார்.
 
பின்னர் இருவரும், திருமணம் செய்து கொண்டு, இருவரும் திருமக்கோட்டையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வருவதாக கூறி சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
 
இதனால், சந்தேகமடைந்த ஸ்ரீமிளாவின் தந்தை சிங்காரவேலு கடந்த மாதம் 31ஆம் தேதி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் ஸ்ரீமீளாவை தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து திருமக்கோட்டை சென்ற காவல் துறையினர் 2 பேரையும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீமீளாவின் பெற்றோரும் உடன் இருந்தனர். விசாரணையில் ஸ்ரீமீளா பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார்.
 
மேலும் தனது காதல் கணவர் கண்ணனுடன் செல்ல அனுமதிக்குமாறு காவல் துறைய்னரிடம் கூறினார். ஸ்ரீமீளா திருமணம் செய்து கொண்ட பெயிண்டர் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.