வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (21:00 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை

விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருவதால், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

 
டெல்லி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் மாணவர்கள் விவசாயிகளுக்கு அதரவாக போராடி வருவதால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பலகலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.
 
மேலும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.