1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (12:11 IST)

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா

சென்னை கோட்டையில் இன்று காலை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை முறைப்படி ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா.
 

 
ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், இன்று காலை 10.45 மணியளவில் சென்னை போயஸ்கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 11 மணிக்கு கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அங்கே, சபாநாயகர் தனபால் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா, உறுதிமொழியைப் படித்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.