வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (13:04 IST)

மாமியார் வீட்டுக்கு செல்லப்போவது யார்?: தினகரனா? எடப்பாடியா?

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர்களும் பதிலுக்கு தினகரனை விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று தன்னை வெற்றிபெறச்செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்த தனது ஆதரவாளர்களுடன் ஆர்கே நகருக்கு சென்றார் தினகரன். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.
 
அப்போது பேசிய அவர், நான் முதல்வரை தரம் தாழ்த்திப் பேசுகிறேன் என்று தங்கமணி கூறுகிறார். உண்மையில், முதல்வரும் அமைச்சர்களும்தான் என்னை ஒருமையில் பேசி வருகின்றனர் என்றார்.
 
மேலும் அவர்கள் கூறுகையில் நான் மாமியார் வீட்டுக்குச் செல்லும் நிலையில் நான் இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் தற்போது அவர்கள்தான் அந்த நிலையில் உள்ளனர் என்றார் தினகரன்.