வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (15:48 IST)

கற்பழிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள் - பாடகி சின்மயி பகீர் புகார்

சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியான தகவலை அடுத்து, தனக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்படுவதாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில்,   அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல், பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், சுச்சிலீக்ஸ் என்கிற ஹேஸ்டேக்கில் இருந்து நடிகைகள் என்ற பெயரில் பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், தன்னுடைய முகத்தில் ஆசிட் அடிக்கப் போவதாகவும், தன்னை கற்பழிக்க போவதாகவும் பலர்  தன்னுடைய விட்டர் பக்கத்தில் மிரட்டுவதாக சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறு மிரட்டல் விடுபவர்களின் டிவிட்டர் கணக்குகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என மாற்றம் கோரும் இணையதளமான சேஞ்ச் டாட் காம் வெப்சைட்டில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.