1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (05:04 IST)

ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை: ஆர்.கே.நகர் தொகுதியில் ரோசு போட்டி

வரும் சட்ட மன்ற தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் ரோசு போட்டியிட உள்ளார்.
 

 
தமிழகத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வர உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தயார் செய்வதில் மிகவும் கவனம் கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ரோசு போட்டியிட உள்ளார். தற்போது நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
 
இதே தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோசுவை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.