வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam

சென்னை மெரீனா காவல்நிலைய இன்ஸ்பெக்டரை தாக்கிய மர்ம நபர்கள் யார்?

சென்னை மெரீனாவில் மீண்டும் மாணவர்களின் அறப்போராட்டம் எப்போது வேண்டுமானாலும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெரீனா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் இரவுபகலாக பாதுகாப்பு பணியை கவனித்து வருகிறார்.



 


இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில், மெரினா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டரே தாக்கப்பட்டுள்ளதால் காமராஜர் சாலை முழுவதும் பதட்டத்துடன் காணப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.