வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (13:45 IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்துத் தற்கொலை

சென்னையை அடுத்த நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலாங்கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  வெங்கடேசன், அவரது மனைவி மலர், மகள்கள் ஹரிணி, பரணி ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதில் வெங்கடேசன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர், அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து புகை வந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவைத் தட்டினார்கள். ஆனால் கதவை யாரும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டில் தீ எரிந்து கொண்டு இருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

வீட்டின் ஒரு அறையில் வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். சிறுமி பரணி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள்.

உடனடியாக அந்தச் சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

பின்னர் 4 பேரின் உடல்களையும் காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தீக்குளிப்பு, தற்கொலை, 4 பேர் பலி, நீலாங்கரை
chennai, fire accident, suicide, 4 dead
chennai-fire accident-suicide-4 deadஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்துத் தற்கொலை

சென்னையை அடுத்த நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலாங்கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வெங்கடேசன், அவரது மனைவி மலர், மகள்கள் ஹரிணி, பரணி ஆகியோர்.

இதில் வெங்கடேசன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்னர், அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து புகை வந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவைத் தட்டினார்கள். ஆனால் கதவை யாரும் திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டில் தீ எரிந்து கொண்டு இருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

வீட்டின் ஒரு அறையில் வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். சிறுமி பரணி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள்.

உடனடியாக அந்தச் சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

பின்னர் 4 பேரின் உடல்களையும் காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.