வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (17:37 IST)

அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது இந்தூர், லக்னோவில் இரண்டு மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுகளுக்கு  பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் இரண்டு கல்லூரிக்கு அனுமதி தந்ததாக அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டியது. இரண்டு மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.

இந்நிலையில் மோசடி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது, பாமாக-விற்கு பெரும் பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.