வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (14:51 IST)

கந்துவட்டி தொடர்பான கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து கேலிச் சித்திரங்கள் மூலம் விமர்சினம் செய்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. இவர் தற்போது சொந்தமாக மீடியா நிறுவனத்தை தொடங்கி அதில் கார்ட்டூன் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.
 
கடந்த மாதம் நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசை சாடும் வகையில் கார்ட்டூன் ஒன்றை பாலா பதிவிட்டார். 
 
முதல்வர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த கார்ட்டூன் இருந்தது. இந்நிலையில் இன்று காலை பாலா அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.