வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (12:32 IST)

பல்லடம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

நேற்று தை அமாவாசையையொட்டி கோவை கே.என்.புதூரைச் சேர்ந்தவர் ரமேஷ்(55) இவரது அண்ணன் முரளி ஆகிய இருவரும் தனது உறவினர்கள் 8 பேரை அழைத்து கொண்டு 2 கார்களில் ராமேஸ்வரம் சென்றனர்.முதல் காரில் 6 பேரும்,இரண்டாவது காரில் 4 பேரும் சென்றனர்.


 

 
அங்கு தரிசனம் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முதல் கார் வேகமாக முன்னே சென்றது. அவர்களை பிந்தொடர்ந்து சென்ற இரண்டாவது காரில் பயணம் செய்தவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மூலப்பாதை பிரிவு ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதினர்.

இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், முரளி, ஸ்ரீவிஷ்ணு, பாலாஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இது குறித்து தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உயிரிழந்த 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.