திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (08:44 IST)

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்குமா? கர்நாடகத்திற்கு கொடுக்க மனம் இருக்கிறதா?

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேற்பார்வை குழுவில் தமிழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


 
இது தொடர்பாக, காவிரி மேற்பார்வை குழுவின் கூட்டம் புதுடெல்லியில் முடிவடைந்ததும் அக்குழுவின் தலைவர் சஷி சேகர் கூறியதாவது,“ கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்து தற்போது வரையிலான 9 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவு, அந்த ஆண்டு அணைகளில் இருந்த தண்ணீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களையும் தருமாறு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களை கேட்டு இருக்கிறோம்.

அவை அனைத்தையும் 15-ந் தேதிக்குள் 4 மாநிலங்களும் தரவேண்டும். அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்யும். அதன் பிறகு 19-ந் தேதி மீண்டும் இந்த கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். அன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும்.” என்றார்.