வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (18:09 IST)

கண்களை கட்டிக் கொண்டு கீ போர்டு வாசிக்கும் சிறுவன் - சென்னையில் அதிசயம்

சென்னையில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது கண்களைக் கட்டிக் கொண்டு பல மணி நேரங்கள் கீ போர்ட்டை வாசித்து பலரையும் கவர்ந்து வருகிறான்.


 

 
சமீபத்தில் நங்கநல்லூரில் உள்ள ஏ.ஜி.எஸ் காலனி பகுதியில் இரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சாதனலாயா இசைப்பள்ளி மாணவர் கோகுல் வருண் தனது கண்களை கட்டிக் கொண்ட்டு கீ போர்டை வாசித்து பலரின் பாராட்டையும் பெற்றான். 
 
கீ போட்டு மட்டுமில்லாமல், ஓவியம், வயலின், கராத்தே ஆகியவற்றை வருண் கற்றுள்ளான். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருண பல பரிசுகளை வென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதிகபட்சமாக 7 மணி நேரங்கள் கண்களை கட்டிக் கொண்டு கீ போர்டு வாசிக்கும் திறன் வருணுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.