வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (15:38 IST)

கல்லூரி மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த மாணவன் கைது!

கல்லூரி மாணவியை கடத்தி உல்லாசம் அனுபவித்த மாணவன் கைது!

நாமக்கலில் கால்லூரி மாணவி ஒருவரை சக மாணவன் ஒருவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து உல்லாசமாக இருந்துள்ளான். மாணவியை மீட்ட போலீசார், மாணவனை கைது செய்தனர்.


 
 
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார் 17 வயது மாணவி சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கல்லூரியில் பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 17 வயது ஆனந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவனும் வருகிறார்.
 
இந்த நிலையில், கடந்த புதன் கிழமை கல்லூரி சார்பில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட சுகன்யாவை அங்கு சென்ற ஆனந்த் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுவிட்டார். இதனையடுத்து மாலையாகியும் வீடு திரும்பாத சுகன்யாவை அவரது பெற்றோர்கள் தேடினர்.
 
தங்களது உறவினர்கள், சுகன்யாவின் தோழிகள் வீடுகளில் சென்று தேடிப் பார்த்தும் கிடைக்காத சுகன்யா குறித்து எருமப்பட்டி போலீஸில் புகார் அளித்தனர் அவரது பெற்றோர்கள்.
 
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமில் இருந்த சுகன்யாவையும் ஆனந்தையும் பிடித்தனர். இவர்களுக்கு நிஜந்தன், பிரியா என்ற தம்பதியினர் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
 
அங்கு வைத்து 17 வயதான மாணவி சுகன்யாவை மாணவன் ஆனந்த் பாலியல் பலாத்காரம் செய்தது உல்லாசமாக இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவரைக் கைது செய்த போலீஸார் சேலம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியர் நிஜந்தன், மற்றும் பிரியாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.