வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 23 ஜனவரி 2015 (18:02 IST)

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை மையப்படுத்தி பிரச்சாரம்: தமிழிசை தகவல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
ஊழல் வழக்கால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததை ஸ்ரீரங்கம் மக்களுக்கு பிரச்சாரத்தின்போது எடுத்துக் கூறுவோம் என்றார். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சுப்பிரமணியன் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவருக்கு பாமக ஆதரவு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் பேசிய அவர் ஸ்ரீரங்கத்தில் தமிழக அமைச்சர்கள் குவிந்துள்ளதால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக புகார் கூறியுள்ளார்.
 
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி & ஜெயலலிதா சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் நலனுக்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறினார். இந்த சந்திப்பு குறித்து மாநில தலைமைக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.