1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (00:50 IST)

தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் சமூக வலைதள ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று தமிழகம் உள்ள சூழலில் ஒரு மாற்று அணி கட்டாயம் தேவை. பாஜக கூட்டணியை விட்டு சிலர் வெளியேறலாம். ஆனால், பலர் பாஜக கூட்டணி நோக்கி வரலாம். பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
 
பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் சட்ட மன்றத் தேர்தலை பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றார்.