1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (09:36 IST)

பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசன் வந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்: இல.கணேசன்

பாஜக கூட்டணிக்கு  ஜி.கே.வாசன் வந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறினார்.
 
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது இல. கணேசன் செய்தியார்ளிடம் கூறுகையில், "நான் இன்று மதுரைக்கு புதிய கட்சியை தொடங்கி வைக்க வந்துள்ளேன். திருமாறன் என்பவரின் தென்னிந்திய பார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியை தொடங்கி வைக்க இன்று வந்துள்ளேன்.
 
தேவர் பெருமானின் எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் முழுமையாக அரசியல் களத்தில் அமல்படுத்த வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மத்தியில் ஆளும் பாஜகவை ஆதரித்தாலும், மாநிலத்தில் எதிர்போக்கை கடைபிடிக்கிறார்கள். இந்த நிலையை அவர்கள் மற்றிக்கொள்ள வேண்டும்.
 
எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் வருகிற தேர்தலில் அதிக இடங்களை பிடிக்கலாம். திமுக–அதிமுக வுக்கு மாற்று அணியாக தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக தேர்தலை சந்திக்கும்.
 
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நல்ல நண்பர், பண்பாளர். அவருடன் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அவர் மாநிலத்தை தவிர்த்து தேசியத்தையும் பலப்படுத்த பாடுபட வேண்டும். இதற்கு அவர் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அப்படி வந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று இல. கணேசன் கூறினார்.