செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (10:36 IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்

நடத்தையில் சந்தேகப்பட்டு, ஆத்திரம் அடைந்த கணவர் மரம் வெட்டும் கத்தியால் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அஸ்தினாபுரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் முருகன். மரம் வெட்டும் தொழிலாளியான அவக்கு வயது 40.
 
அவருது மனைவி பூங்கொடி. அவர்கள் இருவரும் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
 
இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி பூங்கொடியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர்களுக்கு இடையே வாக்குவாதமும், தகராறும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. 
 
சில தினங்களுக்கு முன்னர், வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த முருகன் திடீரென மரம் வெட்டும் கத்தியால் பூங்கொடியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால், பூங்கொடி சம்பவ இடத்தியே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து, முருகன்  தெள்ளார் காவல் நிலையத்திற்குச் சென்று சரண் அடைந்தார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.