வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 13 ஜனவரி 2016 (22:34 IST)

வெற்றிக்கு தயராகுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு

வரும் சட்டப் பேரவை வெற்றிக்கு தயராகுங்கள் என தனது கட்சித்  தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
தமிழகத்தில், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் மாவட்ட அதிமுக  அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது.
 
இந்த மாவட்ட அலுவலங்களை முதல்வர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.மேலும், அங்கு  நிறுவப்பட்டுள்ள  எம்ஜிஆர் சிலைகளையும் திறந்து வைத்தார்.
 
அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவே  எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் தான் அதிமுக. மக்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவை நான் கட்டிக் காத்து வருகிறேன். விரைவில், நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்றார்.