1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 30 மார்ச் 2015 (11:07 IST)

மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கொலை செய்தேன்: தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்

செங்கல்பட்டில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது மனைவியை ஆபாச படம் எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்தேன் என்று தொழிலதிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பழைய புற்றுநோயாளிகள் பிரிவு அருகே நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.
 
அவரது முழங்காலிலும், மூக்கிலும் ரத்தக்காயம் காணப்பட்டன. இது குறித்து தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுண் காவல்துறை ஆய்வாளர் சரவணன் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் முடிச்சூர் கிருஷ்ணாநகர் கன்னியம்மன் நகரைச் சேர்ந்த 21 வயதுடைய பிரகாஷ் என்பது தெரியவந்தது.
 
மேலும் அவர் பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கதவு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேன் டிரைவராகப் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
 
அவர் கொலை செய்யப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷை தனியார் தொழிற்சாலை உரிமையாளர் வெங்கடேசன் என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை காவல்துகறையினர் கைது செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வாக்கு மூலம் கொடுத்தார். 
 
அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;–
 
தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்த பிரகாஷ் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றபோது பிரகாஷையும் அழைத்து சென்றேன்.
 
அங்கு எனது மனைவியை ரகசியமாக தனது செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளான். இது பற்றி முதலில் எனக்கு தெரியவில்லை கடந்த புதன் கிழமை முதல் அவன் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் எனது செல்போனில் பேசிய பிரகாஷ், உனது மனைவியை ஆபாச படம் எடுத்து வைத்துள்ளேன். அதனை வெளியிடாமல் இருக்க பணம் தரவேண்டும் என்று மிரட்டினான்.
 
அதிர்ச்சி அடைந்த நான் அவனை கண்டித்து எச்சரித்தேன். இருப்பினும் பிரகாஷ் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டினான். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணம் தருவதாகக் கூறி பிரகாஷை தொழிற்சாலைக்கு வரவழைத்தேன். அவன் தனியாக வந்தபோது தாக்கினேன்.
 
இதில் மயக்கம் அடைந்த பிரகாஷை மோட்டார் சைக்கிளில் வைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் போட்டு விட்டு வந்து விட்டேன். இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் அவர் கூறியியுள்ளார்.
 
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.