வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (13:20 IST)

தொடர் போராட்டத்திற்கு பின் ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன்

தொழிலாளி மீது மது அருந்திவிட்டு மோதி விபத்துக்குள்ளான வழக்கில் தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
சென்னை தரமணியில் கடந்த 1ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து, ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஐஸ்வர்யா ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை மூன்று முறை ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறந்த அளவே மது அருந்தியதாக ஐஸ்வர்யா தரப்பிலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே மருந்து அருந்தியதற்கான ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞரும் வாதாடினர்.
 
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.