வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (17:41 IST)

முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருதை வழங்கினார் ஜெயலலிதா

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையை செய்து வந்த முனைவர் சாந்தி ரங்கநாதனுக்கு 2015ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அவ்வையார் விருதை, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலையில் வழங்கினார்.

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவ்வையார் விருதுக்கான ஒரு லட்ச ரூபாய் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் ஜெயலலிதா சாந்தி ரங்கநாதனுக்கு வழங்கினார்

குடிபோதை மீள் சிகிச்சை பற்றிய முனைவர் பட்டமும், குடிபோதை மீள் ஆலோசகருக்கான உலக அளவில் அங்கீகார சான்றிதழையும் சாந்தி ரங்கநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக சேவைக்காக, 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1999ஆம் ஆண்டு ஐ.நா சிவில் சமூக விருதும், சாந்தி ரங்கநாதனுக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திலிருந்து மீட்பு சேவையில் 33 ஆண்டுகளாக இவர் ஈடுபட்டுள்ளதை பாராட்டி, இந்தாண்டுக்கான தமிழக அரசின் அவ்வையார் விருது, சாந்தி ரங்கதாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.