1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (10:35 IST)

தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதில் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது: கருணாநிதி குற்றச்சாட்டு

நதிநீர் பிரச்சினையில் தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதில் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ் சாற்றியுள்ளார்.
 
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 93ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
 
கேள்வி:- கர்நாடக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் வகையில் அணை கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறதே?.
 
பதில்:- நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதிலும், தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுவதிலும் கர்நாடக அரசு முன்னணியில் இருக்கிறது.
 
அதை எதிர்க்கிற அதே நேரத்தில் இப்பிரச்சினையை பற்றி கவலைப்படாமல் இருக்கின்ற இன்றைய தமிழக அரசை நான் தி.மு.க. சார்பில் கண்டிக்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.