வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:43 IST)

சென்னை எஞ்ஜீனியருக்கு கொரோனா?? – தீவிர சிகிச்சை!

பிரேசிலில் இருந்து சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் இன்று பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ரத்த மாதிரிகளின் முடிவிற்கு பிறகே அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். இந்நிலையில் தமிழக எல்லை பகுதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.