வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (13:47 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் தெரிவிகின்றன. 
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
 
இதில் 1400 காளைகள் பங்கேற்கிறது. 848 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள் . இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் போட்டி துவங்கிய சில மணிநேரத்திலேயே ஒருவர் நெஞ்சுவலியால் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். 
 
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இம்மூறை அதிகளவில் மக்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.