1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (17:56 IST)

அக்ஷய் குமார், ரஜினியை கலாய்த்த நெட்டிசன்: பேண்டுக்கு ஜிப்பாவது அவரே போடுவாரா!

நடிகர் ரஜினிகாந்தின் எளிமையை பார்த்து நான் வியந்து போனேன் என்று கூறிய அக்ஷய் குமாரின் விளக்கத்தை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு இணையவாசி கலாய்த்துள்ளார். பலரும் அதில் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.


 
 
ரஜினியின் எளிமையை பார்த்து தானே அவர் வியந்தார் அதில் என்ன கலாய்க்க இருக்கிறது என கேட்காதீர்கள். ரஜினியின் எளிமை என அக்ஷய் குமார் கூறியதை பார்த்தால் உங்களுக்கே கலாய்க்க தோனும். எளிமை குறித்து அக்ஷய் குமார் கூறியதாவது:-
 
படப்பிடிப்பில் ஒரு நாள் ரஜினிகாந்த் நடந்து கொண்ட விதம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டதும் ஓரமாக சென்று உட்கார்ந்து இருந்தார். அவருக்கு பணிவிடைகள் செய்ய சுற்றிலும் 15 பேர் நின்று அவரது கண் அசைவுக்காக காத்துக்கொண்டு நின்றார்கள்.


 
 
அப்போது ரஜினி அணிந்து இருந்த பேண்டில் தூசி ஒட்டிக்கொண்டு இருந்தது. அதை துடைக்க கூப்பிடுவார் என 15 பேரும் தயாராக இருந்தார்கள். ஆனால் ரஜினி யாரையும் அழைக்கவில்லை. அந்த தூசியை தனது கையால் தட்டிவிட்டு சரிபடுத்தினார்.
 
ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் அந்த அந்த எளிமையான செயலை பார்த்து வியந்து போனேன் என அக்ஷய் குமார் கூறினார். இப்ப சொல்லுங்க உங்களுக்கு கலாய்க்க தோனுதா? இல்லையா?.