வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 மே 2016 (10:10 IST)

கள்ளக்காதலி வெட்டிக் கொலை: நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 


சேலம் மாவட்டம் சூரமங்கலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 
 
அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இந்த தம்பதியினர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, தீபா தனது தாயுடன் சேலம் பெரமனூர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் லோகேஸ்வரன் என்பவருடன், தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
 
இதையடுத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
பின்னர், லோகேஸ்வரனுக்கும் தீபாவுக்கு இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
 
இதனால் தீபா கோபித்துக்கொண்டு தனது தாயுடன் ஜாகீர் ரெட்டிப்பட்டிக்குச் சென்றுள்ளார். லோகேஸ்வரன் அங்கும் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில், லோகேஸ்வரனுக்கு தீபாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இந்நிலையில், லோகேஸ்வரன் ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள தீபாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு  இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
 
அப்போது, ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன் அங்கிருந்த கொடுவாளால் தீபாவை சரமாரியைக வெட்டியுள்ளார்.
 
இதில் கழுத்து மற்றும் நெற்றியில் பலத்த ரத்தக்காயங்களுடன் சுருண்டு விழுந்த தீபா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த  காவல்துறையினர் லோகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.