வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (20:11 IST)

மோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு? அப்பாவியாய் கேள்வி கேட்கும் அமைச்சர்

2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என முழக்கமிட்டு தமிழகத்தில் 37 எம்பி-களை வெற்றி பெறச் செய்து இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.
 
ஆனால் அவரின் மறைவுக்கு பின் அதிமுக முழுவதும் பாஜக கட்டுப்பாட்டில் சென்று விட்டது. புகழ்பாடியேப் பழக்கப்பட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் இடத்தில் மோடியை வைத்துப் புகழ்பாடி வருகின்றனர்.  
 
அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமார் உச்சகட்டமாக, ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழி நடத்துகிறார் என பேசி அதிர்ச்சியை கிளப்பினார். இது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், மோடியை டாடினு கூப்பிட்டா என்ன தப்பு? என கேட்டுள்ளார். 
 
இதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். அதாவது, இந்திரா காந்தியை அன்னைன்னு தானே அழைக்கிறோம். சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்றுதானே சொல்கிறோம். அதேபோல் தேசத்தை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல என்ன தப்பு? ஒரு தவறும் இல்லை என கூறியுள்ளார்.