வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:11 IST)

நடிகையை கர்ப்பமாக்கி தப்பிச் சென்ற இளம் நடிகர்

சென்னை மதுரவாயிலில் நானும் எனது கணவர் இளையராஜாவும் கணவன் மனைவியாக வாழந்து வந்தோம். இவருடைய அண்ணன், அப்பா, அம்மாவுடன் எனது வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கர்ப்பமாக்கிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு சென்றுவிட்டனர்.

தற்போது, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்கவேண்டும் என்றும் நடிகை ஹேமலதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

 

 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 
சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் தற்போது வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ஆகும் , ஆனால் சென்னையில் கடந்த 5 வருடங்களாக வசித்து வருகிறேன் .நான் சில தெலுங்கு  படங்களில் நடிகையாக  நடித்துள்ளேன். தற்போது சென்னையில் சினிமா மற்றும் விளம்பர படங்களை தயாரித்து வருகிறேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமா தயாரிப்பில் இழந்துவிட்டேன்.


 
 
சில வருடங்களுக்கு முன் முயல் படத்தில் கதநாயகனாக நடிந்த..
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

இளையராஜா என்பவரின் அறிமுக கிடைத்தது. அறிமுகம் ஆனா சில தினங்களில் என்னை காதலிப்பதாககூறினார்.
 
ஏற்கனவே காதலித்து ஏமந்துவிட்டவிட்டேன் இனிமேல் காதல் வலையில் வில மாட்டேன் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். சில நாட்கள் பின் என்னை காதலிக்கவில்லை என்றால் வீட்டு மாடியில் இருந்து குதித்துவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் நான்  அவரை காதலித்தேன்.
 

 
சில நாட்களில் என்னை அழைத்து எனது வீட்டு பூஜை அறையில் தாலி கட்டி என்னை மனைவியாக்கிக் கொண்டார். பின்னர் இவரது அண்ணன் திருமணத்துடன் எனக்கும் இளையராஜாவுக்கும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
 
பின்னர்  கணவன், மனைவியாக மதுரவாயில் உள்ள  எனது வீட்டில் இளையராஜாவின் குடும்பத்துடன் வசித்து வந்தோம் ,பின்னர் கடந்த ஜனவரி மாதம் கழித்து நான் கர்ப்பமானேன். இவரது தாய் இப்போழுது குழந்தை வேண்டாம் என்று கூறி என்னை கருக்கலைப்பு செய்ய சொன்னார். இவர்களின் வருப்புறுத்தலில் எனது கருவை கலைத்துவிட்டேன். 


 
சில நாட்களில் இவர்கள் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டனர்,  தற்போது அவர் சொந்த ஊரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார் என்று  அவரது அண்ணன் தெரிவிக்கிறார். மேலும் , இவரது குடும்பத்தினர் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்கள் . சொந்த ஊரில் நடக்கும் எனது கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்தி என்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
 
அவர் அளித்த புகாரின் பேரில் தற்போது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.