வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (16:13 IST)

தமிழர்கள் தாக்கப்படும் விவகாரம் : விஜய்சேதுபதி உருக்கம் (வீடியோ)

தமிழர்கள் தாக்கப்படும் விவகாரம் : விஜய்சேதுபதி உருக்கம் (வீடியோ)

காவிரி நீர் விவகாரத்தில், சாதாரண பொதுமக்களை யாரும் தாக்க வேண்டாம் என கன்னட அமைப்பினருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
காவிரி நிர் தொடர்பாக எழுந்த பிரச்சனையில்,  கன்னட அமைப்பினர், தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது.
 
கர்நாடக எல்லையில் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒரு வாகனத்தை வழிமறித்த கும்பல், அவர் முதியவர் என்றும் பாராமல் கன்னடம் பேசக்கூறி கன்னத்தில் அடித்தனர். மற்றொரு இடத்தில், ஒரு ஓட்டுனரை நிர்வாணமாக்கி அமர வைத்து அசிங்கப்படுத்தினர். 
 
இந்த சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், சாதாரண பொது மக்களை யாரும் தாக்காதீர்கள் என்று கன்னட அமைப்பினருக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...