வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:56 IST)

வழக்கறிஞர் மீது தாக்குதல் ; தலைமறைவான சந்தானம் : வலை வீசி தேடும் போலீஸ்

தொழில் பங்குதாரரரும், வழக்கறிஞருமான சண்முகசுந்தரத்தை தாக்கிய வழக்கில், நடிகர் சந்தானம் தலை மறைவாகி விட்டதால், அவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


 

 
நடிகர் சந்தானம், வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரத்துடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக ரூ.3 கோடி முன்பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பணத்தை வாங்கிவிட்டு கட்டிடம் கட்ட காலதாமதம் ஆகிவிட்டதாக தெரிகிறது. இதனால் சந்தானம் பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தர அந்த சண்முகம் மறுத்துளார்.
 
இதுகுறித்து நியாயம் கேட்க போனபோது, நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரத்திற்கும், சந்தானத்திற்கும் முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்முகசுந்தரத்திற்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரையும் சந்தானம் தாக்கியதாக தெரிகிறது. இதில் வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. 
 
அந்த சண்டையில் சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதால், அவர் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
 
இந்த விவகாரம் குறித்து இருதரப்பினர்களும் புகார் கொடுத்துள்ளதாகவும் இருவர் மீது போலீஸ் தரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தானத்திடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. 
 
இதையடுத்து, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.