கும்மிடிப்பூண்டியில் கொடூர விபத்து: உடல் நசுங்கி 5 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே நெடுஞ்சாலையில் மினிவேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்று காலை மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மினி வேனில் வந்த நெல்லூரை சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஏழுபேரை உடனடியாக மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.