வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (17:12 IST)

கும்மிடிப்பூண்டியில் கொடூர விபத்து: உடல் நசுங்கி 5 பேர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே நெடுஞ்சாலையில் மினிவேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.



 
 
கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்று காலை மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மினி வேனில் வந்த நெல்லூரை சேர்ந்த வியாபாரிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஏழுபேரை உடனடியாக மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த விபத்து குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.