அப்துல் கலாம் மறைவு - அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு காரணமாக, அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
உலகம் புகழும் வகையில், இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய `பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழ் அன்னையின் பெருமை மிகு புதல்வராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாம்-ன் எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும் பண்பும் உலகம் அறிந்த உயர்ந்த குணங்கள் ஆகும்.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.