1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (17:36 IST)

மக்கள் வெள்ளத்தில் மனோரமாவின் இறுதி ஊர்வலம்

சென்னை தி.நகரிலிருந்து மனோரமாவின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்பொழுது, மக்கள் வெள்ளத்தில் மனோரமாவின் இறுதி  ஊர்வலம் நடைபெற்றது.


 

சாலையின் இருபுறங்களிலும் கூடு இருந்த ஏராளமானோர் மனோராமாவின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழ் திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளோமானோர் பங்கேற்றனர். சென்னையில் சாலை நெரிசல் அதிகமாக காணப்படும் ஜெமினி மேம்பாலம் வழியாக கொண்டு செல்லப்பட்டதால், சாலையின் இருபுறம் கூடு இருந்த பொதுமக்களின் கூட்டத்திற்கு இடையே அவரது உடல் கொண்ட செல்லப்பட்டது.
 
அவரது வீட்டு பக்கத்திலேயே கண்ணம்மாபேட்டை சுடுகாடு இருந்தாலும் மின் மயானத்தில் தன் உடலை எரிக்கக்கூடாது என்று பழைய பாரம்பரிய முறைப்படி தன் உடலை தகனம் செய்யவேண்டும் என்றும் ஆச்சி தெரிவித்திருந்தார், அவரது விருப்ப படி  மயிலாப்பூர் இடுகாட்டிற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு பாரம்பரிய முறைப்படி உடல் தகனம் செய்யப்பட்டது.
 
மக்கள் வெள்ளித்திற்கு மத்தியில் நடிகை மனோரமாவின் இறுதி பயணம் முடிந்தது.