1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (12:50 IST)

ஏண்டா லேட்டா வந்த என்று கேட்டதால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் திட்டியதால், மாணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மகன் ரகு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று மாணவன் பள்ளிக்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பாசிரியர் மாணவனை வகுப்பிற்கு வெளியே நிற்கும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான்.
 
உடனடியாக மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.